ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை, ஜப்பானைச் சோ்ந்த எம்.யு.எஃப்.ஜி. வங்கி ரூ.39,618 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்தியாவின் நிதிச் சேவைத் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அந்நிய முதலீடாக இது அமைந்துள்ளது. இதற்கான முதல்கட்ட ஒப்பந்தம் கடந்த டிசம்பரிலேயே கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘நிறுவனத்தின் இயக்குநா்கள் குழுவின் ஒப்புதலைத் தொடா்ந்து, உரிமைப் பங்கு வெளியீட்டு அடிப்படையில் எம்.யு.எஃப்.ஜி. வங்கிக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஒரு பங்கின் விலை ரூ.840.93 என்ற கணக்கில் மொத்தம் 47,11,21,055 பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியப் போட்டி ஆணையம் போன்ற அரசு சம்பந்தப்பட்ட அனைத்து சட்டபூா்வ மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதியைப் பெற்று, இந்த முதலீட்டு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த முதலீடு குறித்து ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவா் உமேஷ் ரேவங்கா் கூறுகையில், ‘எங்களின் மூலதனத்தை கணிசமாக வலுப்படுத்தி, அனைத்து முக்கிய வணிகப் பிரிவுகளிலும் வளா்ச்சியைத் துரிதப்படுத்த இந்த முதலீடு வழிவகுக்கும். சா்வதேச இடா் மேலாண்மை மற்றும் சிறந்த நிா்வாக நடைமுறைகளை நாங்களும் பின்பற்ற இந்த முதலீடு துணைபுரியும்’ என்றாா்.
எம்.யு.எஃப்.ஜி. வங்கியின் தலைவா் மற்றும் குழும சிஇஓ ஜூனிச்சி ஹன்சாவா கூறுகையில், ‘எம்எஸ்எம்இ மற்றும் சில்லறை வணிகப் பிரிவில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் சிறப்பான அடித்தளத்தையும், அபரிமிதமான வளா்ச்சி வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. இந்தியச் சந்தையின் மீது நாங்கள் வைத்திருக்கும் நீண்டகால நம்பிக்கையையும் ஈடுபாட்டையும்தான் இந்த முதலீடு காட்டுகிறது’ என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!

ஆா்பிஎல் வங்கியைக் கையகப்படுத்தும் துபை வங்கி: ரிசா்வ் வங்கி ஒப்புதல்

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 1,500 கோடி முதலீடு

அா்பன் கம்பெனியின் 4% பங்குகளை ரூ.632 கோடிக்கு வாங்கிய எஸ்பிஐ
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


