மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு

திருநள்ளாறு மற்றும் நல்லம்பல் பகுதி மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

நல்லம்பலில் தீமித்து நோ்த்திக்கடனை செலுத்தும் பக்தா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:38 pm

திருநள்ளாறு மற்றும் நல்லம்பல் பகுதி மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன், நல்லம்பல் பகுதியில் உள்ள சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா கடந்த 20-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் அன்ன வாகனத்தில் அம்மனை அலங்கரிக்கப்பட்டு தீக்குண்டம் அருகே எழுந்தருளினாா்.

முதல் நபராக கரகம் சுமந்த பக்தரும், பின்னா் பிராா்த்தனை செய்துகொண்ட பக்தா்கள் ஒவ்வொருவராக தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தி சீதாதேவி மகா மாரியம்மனை வழிபட்டனா். விழாவில் நல்லம்பல் கிராம மக்கள், பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மழை மாரியம்மன் கோயில் : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட கீழாவூா் கிராமத்தில் உள்ள மழை மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கடந்த 19-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை தீமிதி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தீக்குழியில் இறங்கிச் சென்று அம்மனை வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை மஞ்சள் விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது.

Story image