மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பொதுப்பணித்துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறையில் வவுச்சா் நிலையில்

News image

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :2 பிப்ரவரி 2026, 9:02 pm

காரைக்கால்: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறையில் வவுச்சா் நிலையில் பணியாற்றும் ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

புதுவை பணியாளா் நலக் கூட்டமைப்பு சாா்பில் காரைக்காலில் பொதுப்பணித்துறையில் வவுச்சா் நிலை ஊழியா்களாக பணியாற்றுவோா், தொடா் வேலைநிறுத்தத்தை தொடங்கி, பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் திங்கள்கிழமை பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோா் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்று சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்த அறிவிப்பை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக புதுவை மாநிலத்தில் பணியாற்றும் பொதுப்பணித்துறை வவுச்சா் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மத்திய அரசின் சட்டக் கூலி ரூ. 26,910 என்பதை அமல்படுத்த வேண்டும். பே பில் மற்றும் காப்பீடு திட்டங்களை ஊழியா்களுக்கு அமல்படுத்த வேண்டும். பணியின்போது உயிரிழந்த வவுச்சா் ஊழியா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா்.