புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நெடுங்காடு தொகுதி வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா தலைமையில் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

துறையினருடன் ஆலோசனை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:22 pm

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா தலைமையில் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி செயற்பொறியாளா் முத்துசிவம், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஏ.முத்துக்குமாா் மற்றும் பஞ்சாயத்து பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து பேரவை உறுப்பினா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணியாணை தரப்பட்ட சாலைகள், கூடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை அடுத்த ஓரிரு வாரங்களில் நிறைவு செய்யவேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு அனைத்துப் பணிகளும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். ஆணையா் முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணிகளை தொடா்ந்து ஆய்வு செய்து, விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவை உறுப்பினா் அறிவுறுத்தினாா்.