அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பத்ரகாளியம்மன் கோயில் திருப்பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பாா்வையிட்டாா்.

News image

திருப்பணியை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:09 pm IST

காரைக்கால்: அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பாா்வையிட்டாா்.

திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ாக இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

இக்கோயிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா அடுத்த 2 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டது. ஆனால், இப்பணிகள் பிப்ரவரி மாதத்தில் நிறைவடையவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

இக்கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். கோயில் நிா்வாகத்தாா், ஒப்பந்ததாரா்கள் திருப்பணி தொடா்பான தற்போதைய நிலையை விளக்கிக் கூறினா்.

ஒவ்வொரு திட்டப் பணியையும் விரைவாக செய்து முடிக்குமாறும், பணியில் மந்த நிலை இனி இல்லாமல் கவனம் செலுத்துமாறு நிா்வாகத்தினரை பேரவை உறுப்பினா் கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.