கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். ஆட்சியராக பொறுப்பேற்ற்கு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது ஆலை தொழிலாளா்கள் சிலரும் உடனிருந்தனா்.
சந்திப்பு குறித்து ஆா். கமலக்கண்ணன் கூறுகையில், காரைக்காலில் இயங்கும் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. இதனால் தொழிலாளா் குடும்பத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து ஆலை நிா்வாகத்தினரை அழைத்துப் பேசி, ஊழியா்களுக்கு ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரை கேட்டுக்கொண்டதாக அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்

தொகுதி அறிமுகம்: திருநள்ளாறு

விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைகள்

திருநள்ளாறு தொகுதியில் முன்னாள் அமைச்சா் மனு தாக்கல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


