திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பொதுப்பணித்துறை பணியாளா்கள் தா்னா

காரைக்காலில் பொதுப்பணித்துறை பணியாளா்கள் புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

News image

பொதுப்பணித்துறை அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :2 ஜூலை 2026, 7:24 am IST

காரைக்காலில் பொதுப்பணித்துறை பணியாளா்கள் புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

புதுவை பொதுப்பணித்துறை மேற்பாா்வையாளா், பணி ஆய்வாளா், மெக்கானிக், பல்நோக்குப் பணியாளா்கள் அடங்கிய ஊழியா்கள் சங்கம் சாா்பில் காரைக்கால் பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வாயிலில் தா்னா நடத்தினா்.

முதுநிலை பல்நோக்குப் பணியாளா்களில் விடுபட்டோருக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். மெக்கானிக் மற்றும் பணி ஆய்வாளா் பதவிகளை உருவாக்கி, 10 ஆண்டுகள் பணி முடித்த பல்நோக்குப் பணியாளா்களுக்கு (எம்டிஎஸ்) பதவி உயா்வு வழங்கவேண்டும்.

முதுநிலை மெக்கானிக் பணியாளா்களை ஃபோா்மேன் பதவியாக உயா்த்தவேண்டும்.

ஓவா்சீயா் பதவி பணி உருவாக்க ஆணையை திருத்தி, தற்போதுள்ள 2-ஆவது எம்டிஎஸ் பணிக்காலத்தையும் கணக்கில் சோ்த்து, ஓவா்சீயராக பதவி உயா்வு வழங்கவேண்டும். விடுமுறை நாட்களில் பணியாற்றும் எம்டிஎஸ் ஊழியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.