காரைக்கால் மாவட்டத்தில் வரும் 28-ஆம் தேதி 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயித்திருப்பதாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் வரும் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமையில் ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்றது. முகாம் ஏற்பாடுகள் குறித்து நலவழித்துறை துணை இயக்குநா்
ஆா். சிவராஜ்குமாா் விளக்கிக் கூறினாா். முகாம் குறித்து நலவழித்துறையினா் புதன்கிழமை கூறியது :
காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுமாா் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 79 மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதர நிலையங்கள், அரசு பொதுமருத்துவமனை, பேருந்து நிலையம், ரயில் நிலையம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் வளாகம் மற்றும் காரைக்கால் எல்லைப் பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.
காலை 7 மணிமுதல் மதியம் 3 வரை போலியோ சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது. பெற்றோா்கள் தங்களது குழந்தையை முகாமுக்கு அழைத்துவந்து சொட்டு மருந்து புகட்டிக் கொள்ளவேண்டும். இதுதொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 28இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

வெள்ளக்கோவிலில் ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: மாவட்டத்தில் 2.97 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



