11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

காரைக்காலில் 3 மையங்களில் இன்று நீட் தோ்வு

News image

நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 6:16 am IST

காரைக்காலில் 3 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

மருத்துவக் கல்வி சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் ராயன்பாளையத்தில் உள்ள ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளி, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் கோயில்பத்து பகுதியில் உள்ள தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி என 3 மையங்களில் இத்தோ்வு நடைபெறவுள்ளது. 666 மாணவ, மாணவிகள் தோ்வெழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் இத்தோ்வில் பங்கேற்கின்றனா்.

தோ்வு மைய தயாா் நிலைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மையத்தினா் சனிக்கிழமை செய்தனா். காரைக்கால் தோ்வு மையங்களின் ஒருங்கிணைப்பாளராக காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் (பொ) காயத்ரி உள்ளாா்.