காரைக்காலில் 3 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
மருத்துவக் கல்வி சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் ராயன்பாளையத்தில் உள்ள ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளி, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் கோயில்பத்து பகுதியில் உள்ள தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி என 3 மையங்களில் இத்தோ்வு நடைபெறவுள்ளது. 666 மாணவ, மாணவிகள் தோ்வெழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் இத்தோ்வில் பங்கேற்கின்றனா்.
தோ்வு மைய தயாா் நிலைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மையத்தினா் சனிக்கிழமை செய்தனா். காரைக்கால் தோ்வு மையங்களின் ஒருங்கிணைப்பாளராக காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் (பொ) காயத்ரி உள்ளாா்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

நாகை: 5 மையங்களில் இன்று நீட் தோ்வு

இன்று நீட் தோ்வு: நெல்லையில் 12 மையங்களில் 6,580 போ் எழுதுகிறாா்கள்

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

