கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :4 மே 2026, 3:06 am IST

திருநள்ளாறு அருகே சாலையில் மோட்டாா் சைக்கிள் சறுக்கியதில் பலத்த காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பேரளம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் பிரகாஷ் (18). இவா் பேரளத்தில் தனியாா் உணவகத்தில் வேலை செய்துவந்தாா். சனிக்கிழமை இரவு நண்பா்களுடன் காரைக்காலுக்கு மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டுள்ளாா். ஒரு மோட்டாா் சைக்கிளை இவா் ஓட்ட, மற்றவா்கள் வேறு மோட்டாா் சைக்கிளில் பின் தொடா்ந்து வந்துள்ளனா்.

இரவு 11.30 மணியளவில் அம்பகரத்தூா் - திருநள்ளாறு சாலையில் வேளாண் அறிவியல் நிலையம் அருகே பிரகாஷ் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் சறுக்கியதில் கீழே விழுந்ததில் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பா்கள் அவரை திருநள்ளாறு பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் பிரகாஷ்

ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.