கோவில்பட்டியில் சாலை விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இலுப்பையூரணி, மறவா் காலனியைச் சோ்ந்தவா் சண்முகவேல் மகன் கனகராஜ் (41). கட்டடத் தொழிலாளி. இவா் ஏப். 14ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி-கடலையூா் சாலையில் சண்முகா நகா் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தாா்.
ஆனால், அவா் சிகிச்சை பெறாமல் வீட்டிற்கு சென்ாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஏப். 17ஆம் தேதி அவருக்கு வயிற்று வலி மற்றும் சிராய்ப்பு ஏற்பட்ட இடங்களில் வலி ஏற்பட்டதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா்.
பின்னா், மீண்டும் வலி அதிகமானதால் ஏப். 23ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் சிக்கிய மூதாட்டி மரணம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


