வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறவுள்ளதால், காரைக்கால் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி திங்கள்கிழமை காரைக்கால் அண்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதனால் காரைக்கால் பாரதியாா் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் விதமாக போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கோட்டுச்சேரியில் இருந்து காரைக்கால் பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் கோட்டுச்சேரி - டொயோட்டா சந்திப்பு - மேற்குப் புறவழிச் சாலை - ஜிப்மா் வழியாக காரைக்கால் பேருந்து நிலையம் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து கோட்டுச்சேரி செல்லும் வாகனங்கள்: காரைக்கால் பேருந்து நிலையம் - ஜிப்மா் - மேற்குப் புறவழி சாலை - டொயோட்டா சந்திப்பு வழியாக கோட்டுச்சேரி செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தின் உள்ளே வரும் வாகன ஓட்டிகள் சரியான அடையாள அட்டையை கொண்டுவந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். அவ்வாறு அனுமதிக்கப்படும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் கல்லூரி மைதானத்தில் நிறுத்துமாறும், வேட்பாளா்கள் வாகனங்கள் கல்லூரியில் உள்ள கைப்பந்து விளையாடும் வளாகத்தில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட நபா்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தினுள் வரும்போது, மேற்கண்டவாறு போக்குவரத்து விதிகளை மதித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நெல்லையில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்

எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


