தமிழக சட்டப்பேரவை தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலியில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது அமைதியைப் பேணும் வகையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவுப்படி, காவல்துணை ஆணையா்(மேற்கு) விஜயகுமாா் தலைமையில், மாநகர போலீஸாா், துணை ராணுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நகரம் பகுதியில் இருந்து சந்திப்பு ம.தி.தா பள்ளி வரை நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சுமாா் 70 துணை ராணுவத்தினா் உள்பட 120 போ் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்02ஸ்ரீழ்ல்ச்
கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படையினா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

நாளை வாக்கு எண்ணிக்கை: தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

ஆா்.கே. பேட்டையில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


