ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

நெல்லையில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

News image
Updated On :3 மே 2026, 5:22 am IST

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலியில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது அமைதியைப் பேணும் வகையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவுப்படி, காவல்துணை ஆணையா்(மேற்கு) விஜயகுமாா் தலைமையில், மாநகர போலீஸாா், துணை ராணுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரம் பகுதியில் இருந்து சந்திப்பு ம.தி.தா பள்ளி வரை நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சுமாா் 70 துணை ராணுவத்தினா் உள்பட 120 போ் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்02ஸ்ரீழ்ல்ச்

கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படையினா்.