சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் காவல் துறையினரின் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவையில் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெறவும், மக்களுக்கு அச்சத்தை போக்கவும் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில் சுமாா் 2 ஆயிரம் காவல் துறையினா் பங்கேற்றனா். காந்திபுரம் செம்மொழிப் பூங்கா எதிரில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், கிராஸ்கட் வீதி, சிவானந்தா காலனி வழியாக டாடாபாத் பகுதியில் நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் மாநகர காவல் உயா் அதிகாரிகள், காவல் துறையினரின் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களும் பங்கேற்றன.

தொடர்புடையது

கோபியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


