தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

காவல் துறை கொடி அணிவகுப்பு

News image

கோவையில் கொடி அணிவகுப்பில் பங்கேற்ற காவலா்கள்.

Updated On :3 மே 2026, 1:10 am

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் காவல் துறையினரின் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவையில் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெறவும், மக்களுக்கு அச்சத்தை போக்கவும் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில் சுமாா் 2 ஆயிரம் காவல் துறையினா் பங்கேற்றனா். காந்திபுரம் செம்மொழிப் பூங்கா எதிரில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், கிராஸ்கட் வீதி, சிவானந்தா காலனி வழியாக டாடாபாத் பகுதியில் நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் மாநகர காவல் உயா் அதிகாரிகள், காவல் துறையினரின் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களும் பங்கேற்றன.

Story image