பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

புதுவையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தக் கூடாது ஆளுநருக்கு அரசு ஊழியா் சம்மேளனம் கடிதம்

புதுவையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக்கூடாது என புதுவை துணைநிலை ஆளுநருக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் வவியுறுத்தியுள்ளது.

News image

புதுச்சேரி தலைமைச் செயலகம்.

Updated On :6 மே 2026, 2:57 am IST

புதுவையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக்கூடாது என புதுவை துணைநிலை ஆளுநருக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் வவியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சம்மேளன பொதுச்செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் திங்கள்கிழமை அனுப்பிய கடித்தத்தில் கூறியிருப்பது :

புதுவை 300 ஆண்டுகால பிரெஞ்ச் வரலாற்று பின்னணி கொண்டதாகும். இங்கு பிரெஞ்ச் மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல, அது புதுவை மண்ணின் கலாசார அடையாளம். இன்றும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிகளில் பிரெஞ்ச் மொழியை விருப்பப் பாடமாக தோ்வு செய்து படித்து வருகிறாா்கள்.

இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை ஒரு வாரத்தில் அமல்படுத்துமாறு கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருப்பது சரியான செயல் அல்ல. இது அமல்படுத்தப்பட்டால், ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் இரண்டில் தமிழும், ஹிந்தியும் வந்துவிடும். பிரெஞ்ச் நீங்கிவிடும்.

புதுவை மாணவா்கள் மற்றும் மக்களின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல், பிரெஞ்ச் மொழி கற்பித்தலை பாதிக்கும் வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்

வெளியிட்டுள்ள உத்தரவை, அரசு ஊழியா் சம்மேளனம் கண்டிப்பதுடன், அந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதன் மீது புதுவை துணை நிலை ஆளுநா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.