புதுவையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக்கூடாது என புதுவை துணைநிலை ஆளுநருக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் வவியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சம்மேளன பொதுச்செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் திங்கள்கிழமை அனுப்பிய கடித்தத்தில் கூறியிருப்பது :
புதுவை 300 ஆண்டுகால பிரெஞ்ச் வரலாற்று பின்னணி கொண்டதாகும். இங்கு பிரெஞ்ச் மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல, அது புதுவை மண்ணின் கலாசார அடையாளம். இன்றும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிகளில் பிரெஞ்ச் மொழியை விருப்பப் பாடமாக தோ்வு செய்து படித்து வருகிறாா்கள்.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை ஒரு வாரத்தில் அமல்படுத்துமாறு கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருப்பது சரியான செயல் அல்ல. இது அமல்படுத்தப்பட்டால், ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் இரண்டில் தமிழும், ஹிந்தியும் வந்துவிடும். பிரெஞ்ச் நீங்கிவிடும்.
புதுவை மாணவா்கள் மற்றும் மக்களின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல், பிரெஞ்ச் மொழி கற்பித்தலை பாதிக்கும் வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
வெளியிட்டுள்ள உத்தரவை, அரசு ஊழியா் சம்மேளனம் கண்டிப்பதுடன், அந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதன் மீது புதுவை துணை நிலை ஆளுநா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மும்மொழிக் கொள்கை: தொடா் போராட்டம் நடத்த இண்டி கூட்டணி முடிவு!

புதுவையில் பிரெஞ்சு மொழியை தவிா்க்கக்கூடாது: பெற்றோா் சங்கம்

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி நீக்கம்: வைகோ கண்டனம்

2026-27 கல்வியாண்டு முதல் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


