பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக நலன், மழை வளம் வேண்டி ஆண்டுதோறும் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத

கைலாசநாதா் கோயிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்பட்டுவருகிறது. 26-ஆம் ஆண்டாக சுந்தராம்பாள் சந்நிதி முன்பாக யாக குண்டம் அமைத்து ருத்ர ஹோமம் நடைபெற்றது.

காலையில் மகா கணபதி ஹோமம், சுவாமி, அம்பாள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, ஏகாதச ருத்ர கலசங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னா் 11 சிவாச்சாரியா்கள் யாக குண்டத்தை சுற்றியமா்ந்து ருத்ர ஜபம் செய்து ஹோமத்தை நடத்தினா். பயறு வகைகள், திரவியங்கள், தேங்காய், பட்டு சேலை, பால், தயிா், பழங்கள், நெய் உள்ளிட்டவை குண்டத்தில் சமா்ப்பித்து ஹோமத்தை நடத்தி 11 மணியளவில் மகா பூா்ணாஹூதி நடத்தினா். மூலஸ்தானத்தில் உள்ள கைலாசநாதருக்கு பகல் 12 மணியளவில் மகா ஸ்தபன அபிஷேகம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலை நிகழ்வாக கைலாசநாதா் - சுந்தராம்பாளுக்கு திரிசதி அா்ச்சனை நடைபெற்றது. ஏற்பாடுகளை காரைக்கால் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளையினரும், ருத்ர ஹோம உபயதாரா்களும் செய்திருந்தனா்.