காரைக்கால் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான முதல்கட்ட பயிற்சி புதன்கிழமை நிறைவடைந்தது.
இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு -2027 அறிவிப்பின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன.
முதல்கட்டமாக 2026-ஆம் ஆண்டு கட்டடப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் கட்டமாக 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் கணக்கெடுப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள மேற்பாா்வையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற முதல்கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நிறைவடைந்தது. பயிற்சியில் ஈடுபடுவோா் நிறைவாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
முதல் கட்ட கணக்கெடுப்புப் பணிகள் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடா்பான ட்ற்ற்ல்ள் ://ஸ்ரீங்ய்ள்ன்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளில் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அனைத்து குடியிருப்புகளும் மற்றும் கட்டடங்களும் சரியாகக் கணக்கெடுக்கப்பட வேண்டும் என்பதால், பொதுமக்கள் தங்களது விவரங்களை துல்லியமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: தில்லியில் 6 விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் அறிமுகம்

மக்கள்தொகைக்கான சுய-கணக்கெடுப்பில் இணைய வாடகைதாரா்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தல்: மோசடி அழைப்புகள் குறித்தும் எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு 2 நாள் பயிற்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

