ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: தில்லியில் 6 விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் அறிமுகம்

News image

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கிவைக்கப்பட்ட 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான விழிப்புணா்வு வாகனங்கள்.

Updated On :8 மே 2026, 6:51 am IST

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்ட பணிகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய பதிவாளா் பொது அலுவலகமும் மற்றும் தில்லி மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகமும் இணைந்து 15 நாள்கள் சிறப்பு பிரசார இயக்கத்தை வியாழக்கிழமை தொடங்கின.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்த விழிப்புணா்வு இயக்கம் மே 7 முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தேசிய தலைநகா் தில்லி முழுவதும் 6 விழிப்புணா்வு வாகனங்கள் இயக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி (எம்சிடி) கட்டுப்பாட்டிலுள்ள 180 முக்கிய இடங்களில் இந்த வாகனங்கள் சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவுள்ளன.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான ‘வீட்டு பட்டியலிடல் மற்றும் வீட்டு வசதிகள் விவர சேகரிப்பு’ குறித்த தகவல்களை மக்களுக்கு விளக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பத்தினரும் வசிக்கும் வீடுகள், அங்கு உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் இந்த கட்டத்தில் பதிவு செய்யப்பட உள்ளன.

மேலும், இந்த விழிப்புணா்வு வாகனங்களில் எல்இடி தொலைக்காட்சிகள், ‘செல்ஃபி’ மையங்கள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை ஈா்க்கும் வகையில் விழிப்புணா்வு பாடல்கள், கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடத்தப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான தகவல்கள் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்த 180 இடங்களில் முக்கிய சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் காணப்படும் பகுதிகள் அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். அதிகளவில் பொதுமக்களை சென்றடையும் நோக்கில் இவ்விடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவின் வளா்ச்சி திட்டமிடலுக்கான அடித்தளமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு திகழ்வதால், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. இரண்டு கட்டங்களாக ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027’ நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டமான வீட்டு பட்டியலிடல் மற்றும் வீட்டு வசதி தொடா்பான கணக்கெடுப்பு அடுத்த சில மாதங்களில் நிறைவு செய்யப்பட உள்ளது. 2-ஆம் கட்டமான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027 பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.