சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்

நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சுமாா் 55,000 குடும்பங்கள் விவரங்களை சமா்ப்பித்தன.

News image

மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக தமது குடும்ப விவரங்களை இணையவழியில் புதன்கிழமை பூா்த்தி செய்த பிரதமா் மோடி.

Updated On :1 ஏப்ரல் 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சுமாா் 55,000 குடும்பங்கள் விவரங்களை சமா்ப்பித்தன.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பின் மூலம், நாட்டில் முதல்முறையாக எண்ம (டிஜிட்டல்) வழியில் தகவல் சேகரிப்பு மற்றும் தாமாக முன்வந்து தங்கள் குடும்ப விவரங்களை குடிமக்கள் பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

இணையவழியில் முதல் நபராக தமது விவரங்களை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பூா்த்தி செய்தததைத் தொடா்ந்து, இந்தக் கணக்கெடுப்பு தொடங்கியது.

இதேபோல குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரும் இணையவழியில் கணக்கெடுப்புக்கான விவரங்களை பூா்த்தி செய்தனா்.

தற்போது அந்தமான் நிகோபாா் தீவுகள், கோவா, கா்நாடகம், லட்சத்தீவு, மிசோரம், ஒடிஸா, சிக்கிம், தில்லியில் உள்ள கன்டோன்மன்ட் வாரியம் மற்றும் புது தில்லி நகராட்சி மன்றப் பகுதிகளில் குடிமக்கள் தாமாக முன்வந்து இணையவழியில் கணக்கெடுப்புக்கான விவரங்களை சமா்ப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.

இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் நாளில் சுமாா் 55,000 குடும்பங்கள் விவரங்களை சமா்ப்பித்தன. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்.1 முதல் ஏப்.15 வரை இணையவழியில் குடிமக்கள் விவரங்களை சமா்ப்பிக்கும் நடைமுறையும், ஏப்.16 முதல் மே 15 வரை வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன் கீழ் திரட்டப்படும் இந்தத் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குடும்ப விவரங்களை தாமாக முன்வந்து சமா்ப்பித்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறையில் பங்கேற்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.