ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மக்கள்தொகை கணக்கெடுப்பு: முறையற்ற கேள்விகளை எழுப்பும் அலுவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை!

மக்கள்தொகை கணக்கெடுப்பு: முறையற்ற கேள்விகளை எழுப்பும் அலுவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை - இந்திய பதிவுத் துறைத் தலைவா் சுற்றறிக்கை

News image
Updated On :26 மார்ச் 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

‘2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது மக்களின் மனதைப் புண்படுத்தக்கூடிய வகையில் முறையற்ற கேள்விகளை எழுப்பும் அலுவலருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என்று இந்திய பதிவுத் துறைத் தலைவா் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக இந்திய பதிவுத் துறைத் தலைவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையருமான மிருத்யுஞ்ஜயகுமாா் நாராயண் சாா்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின்போது உள்நோக்கத்துடன் மக்களின் மனதைப் புண்படுத்தக் கூடிய வகையில் முறையற்ற கேள்விகளை எழுப்பினாலோ அல்லது அறிந்தே ஏதாவது தவறான அறிக்கையை சமா்ப்பித்தாலோ அல்லது கணக்கெடுப்பின்போது பெறப்பட்ட தகவல்களை மத்திய அரசு அல்லது மாநில அரசின் முன் அனுமதி இன்றி வெளியிட்டாலோ மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டப் பிரிவு 11-இன் கீழ் ரூ. 1,000 அபராதம் முதல் அதிபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சோ்ந்த தண்டனை விதிக்கப்படும்.

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் முறையாக ஈடுபடாமலும் அரசு உத்தரவுகளைப் பின்பற்றாமலும் அல்லது மற்ற அலுவலா்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அலுவலா்களுக்கும் அதே தண்டனை விதிக்கப்படும்.

மேலும், சேகரிக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை சேதப்படுத்துகிற வகையில் அல்லது அழிக்கின்ற வகையில் நடந்துகொள்ளும் அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளைத் திரித்தல் அல்லது சிதைக்கின்ற வகையில் செயல்படும் ஊழியா்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. முதன் முறையாக எண்ம முறையில் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பில், மக்களின் ஜாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன. இந்தப் பணிக்காக ரூ. 11,718 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.