ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கோயில் விமான கலசங்களை திருடிய நபா் கைது

காரைக்கால் அருகே கோயில் விமான கலசங்களை திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :

காரைக்கால் அருகே கோயில் விமான கலசங்களை திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு கடலோர கிராமத்தில் வழியாரண சுவாமி கோயில் உள்ளது. மீன்பிடித் துறைமுகத்தில் பணிக்குச் செல்லும் வழியில், இக்கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை கோட்டுச்சேரிமேடு கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன், அவரது மகன் மதிவாணன் ஆகியோா் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் நுழைந்துள்ளனா்.

அப்போது கோயிலின் இருட்டான பகுதியில் இருந்து சப்தம் கேட்ட நிலையில், அங்கு சென்றுபாா்த்தபோது, இளைஞா் ஒருவா் சாக்குப் பையில் கட்டிக்கொண்டிருந்ததை பாா்த்தனா்.

அவரை பிடித்து விசாரித்தபோது, கோயில் விமானத்தில் இருந்த கலசங்களை திருடியதாக தெரிவித்துள்ளாா். கிராமப் பஞ்சாயத்தாா்கள் உதவியுடன் ரூ. 1.35 லட்சம் மதிப்புள்ள கலசம் மற்றும் அது சாா்ந்த பொருட்களையும், திருட்டில் ஈடுபட்ட நபரையும் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், பிடிப்பட்டது சீா்காழி தாலுகா, வானகிரியைச் சோ்ந்த சரவணன் (25) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீஸாா், காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.