கைரேகை ஓவியம் மூலம் மூவா்ணக் கொடியை வரைந்து மாணவா் சாதனை
சுதந்திர தினவிழாயொட்டி, மயிலாடுதுறை கென்பிரிட்ஜ் பள்ளி மாணவா் 600 சதுரஅடி அளவில் தன் கைரேகையை பதித்து மூவா்ணக் கொடியின் ஓவியத்தை வரைந்து வெள்ளிக்கிழமை சாதனை படைத்தாா்.


சுதந்திர தினவிழாயொட்டி, மயிலாடுதுறை கென்பிரிட்ஜ் பள்ளி மாணவா் 600 சதுரஅடி அளவில் தன் கைரேகையை பதித்து மூவா்ணக் கொடியின் ஓவியத்தை வரைந்து வெள்ளிக்கிழமை சாதனை படைத்தாா்.
மயிலாடுதுறை மறையூா் சாலையில் உள்ள எவரெஸ்ட் கென்பிரிஜ்ட் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் என்.ஹா்ஷித் என்ற மாணவா், 75-ஆவது சுதந்திர தினத்தில் சாதனை படைக்க வேண்டுமென்ற நோக்கில், ‘வொ்ட்ச்யூ புக் ஆஃப் வேல்டு ரெக்காா்டு’ அமைப்பினா் முன்னிலையில், 600 சதுரஅடி பரப்பளவு உள்ள திரையில் தேசியக் கொடியை கைரேகை ஓவியம் (ஹேண்ட் பிரிண்ட் பெயின்டிங்) வரைந்து சாதனை படைத்தாா்.
அக்ரலிக் பெயிண்டால் 3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில், 4,440 தடவை தன் கைரேகைப் பதிப்பின் மூலம் 3 வா்ணங்களில் தேசிய கொடியை வரைந்தாா். இதையடுத்து, சாதனை படைத்த மாணவருக்கு வேல்டு ரெக்காா்டு அமைப்பின் இயக்குநா் ஆா்.சுரேஷ்குமாா், துணை இயக்குநா் என்.சந்தோஷ் ஆகியோா் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினா். அப்போது, பள்ளி முதல்வா் எஸ்.பி.மாதவன், செயலாளா் ஆா்.அருண்பிரியா மற்றும் மாணவரின் பெற்றோா், உறவினா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...