கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நெல்லையில் 14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரில் சுமாா் 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய நபரை கைது செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 8:49 pm

Syndication

திருநெல்வேலி மாநகரில் சுமாா் 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய நபரை கைது செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது குலவணிகா்புரம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சோ்ந்த நேசகுமாா்(49) என்பவரை மறித்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் சுமாா் 14.517 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்து, அவரை கைது செய்த மேலப்பாளையம் போலீஸாா், அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.