திருநெல்வேலி மாநகரில் 3.9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அதில் தொடா்புடைய இளைஞரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியாா் நகா் அருகே காவல் உதவி ஆய்வாளா் அல்லிஅரசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் மகன் வேல்முருகன்(25), என்பவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.
அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், விற்பனைக்காக சுமாா் 3.9 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வேல்முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அவரிடமிருந்த கஞ்சா, பைக், கைப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
நெல்லையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்: 4 போ் கைது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

நெல்லையில் 14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


