ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சீர்காழி அருகே கனமழையால் பயிர் பாதிப்பு: மத்திய குழுவினர் ஆய்வு

சீர்காழி பகுதியில் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

News image
மத்திய குழுவினர் ஆய்வு
Updated On :23 நவம்பர் 2021, 8:28 am

DIN

சீர்காழி: சீர்காழி பகுதியில் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், தரங்கம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரம் முழுவதும் மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 13,500 ஏக்கர் விளை நிலங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது.

மழை, வெள்ளத்தால் சேதம் ஏற்பட்ட பயிர்களை கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவை சேர்ந்த மத்திய அமைச்சகத்தின் உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான, விஜய்ராஜ்மோகன், ரஞ்சன் சிங், வர பிரசாத் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் புத்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Story image

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், பயிர்கள், வீடுகள் குறித்த புகைப்பட புகைப்படங்கள் புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது அதனை மத்திய குழுவினர் பார்வையிட்டு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

ஆய்வின் போது மத்திய குழுவுடன் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி,மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, எம்.எல் ஏக்கள் பூம்புகார் நிவேதா.முருகன்,சீர்காழி பன்னீர்செல்வம்,மயிலாடுதுறை ராஜகுமார் கோட்டாட்சியர் நாராயணன் தாசில்தார் சண்முகம்  வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, மின்சார வாரியம் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.