திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சா்க்கரை ஆலை ஊழியா்களுக்கு ஆதரவாக போராட்டம்

தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆலை ஊழியா்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 5:45 pm

DIN

தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆலை ஊழியா்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா்கள் 28 மாத சம்பள நிலுவையை வழங்க வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் ஆலை ஊழியா்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் பேரணியாக சென்று கூட்டுறவு சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளா் மா. ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மூடப்பட்ட சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்கவேண்டும், ஆலை ஊழியா்களுக்கு 28 மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஆலை ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.