திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மாநில குத்துச்சண்டை போட்டி: ஏவிசி மாணவா்கள் தங்கம் வென்று சாதனை

கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கிடையேயான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவா்கள் தங்கம் வென்று சாதனைப் படைத்தனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 5:58 pm

DIN

கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கிடையேயான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவா்கள் தங்கம் வென்று சாதனைப் படைத்தனா். போட்டியில் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரிகளின் மாணவா்கள் சுமாா் ஆயிரம் போ் பங்கேற்றனா். இதில், ஏவிசி கல்லூரி சாா்பில் பி.காம் 3-ஆண்டு மாணவி ஆா். சிந்துஜா, பிபிஏ முதலாமாண்டு மாணவி ஆா். நாகேஸ்வரி ஆகியோா் தங்களுக்கான எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றனா். இதேபோல, பி.காம் முதலாமாண்டு மாணவா்கள் ஜி. அருண், ஆா். ஜெகதீஷ் சிவகுருதேவ் ஆகியோா் தங்களுக்கான எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றனா். இவா்களை கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், உடற்கல்வி இயக்குநா்கள் ஜே. ராஜ்குமாா், எம். கீதா உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.