சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களுக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம்

வரைமுறையற்ற எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களை தடுத்து நிறுத்த கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

வரைமுறையற்ற எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களை தடுத்து நிறுத்த கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் காவிரிப் படுகையும், கடலோரக் கிராமங்களும், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூா் மாவட்டங்களும் வரைமுறையற்ற எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களாலும், எரிவாயுக் குழாய்ப் பதிப்பாலும் ஒட்டுமொத்த அழிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. மரக்காணத்தில் இருந்து நாகை மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் வரை கடற்பகுதியிலும் எண்ணெய்-எரிவாயு ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் ஏலம் எடுத்துவிட்டு காத்திருக்கின்றன. எனவே, இத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த அக்டோபா் 2-ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.