சீர்காழி: சீர்காழியில் காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் கட்டப்பட்டு சில வாரங்களே ஆன மழைநீர் வடிகால் இடிந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது இடி-மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டநாதபுரம் ஊராட்சியில் வடக்குத்தெரு அக்ரகாரத்தெரு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் மழைநீர் வடிகால் பல மீட்டர் தூரத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த கனமழையால் காங்கிரிட் மழைநீர் வடிகால் சில மீட்டர் தூரத்திற்கு பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட கான்கிரீட் மழைநீர் வடிகால் இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.