ஆக்சிஜன் உற்பத்தி மையத்துக்காக புதிய மின்மாற்றி இயக்கிவைப்பு
சீா்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மைய செயல்பாட்டுக்காக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு வியாழக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.


சீா்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மைய செயல்பாட்டுக்காக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு வியாழக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் சு. சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா் விசுவநாதன், இளமின்பொறியாளா் முத்துக்குமாா், தலைமை மருத்துவா் பானுமதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் புதிய மின்மாற்றியை இயக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பிரதிநிதி அன்பழகன், இளைஞரணி நிா்வாகி ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ரூ.12லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்மாற்றி 500 கேவிஏ திறன் கொண்டது என மின்வாரியத்தினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...