சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நாட்டு நலப்பணித் திட்ட தின விழா

நாட்டு நலப்பணித் திட்ட நாள் மற்றும் சுதந்திர தின பவள விழாவையொட்டி, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மற்றும் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நாட்டு நலப்பணித் திட்ட நாள் மற்றும் சுதந்திர தின பவள விழாவையொட்டி, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மற்றும் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டுவைத்து, ‘மரங்கள் நல்ல வரங்கள்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் வாழ்த்துரையாற்றினாா்.

இதேபோல, தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) கு. பொன்னி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இந்நிகழ்ச்சியை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் சு. சுமதி, தெ. சிவயோகம், எம். சித்ரலேகா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதில், கல்லூரி பேராசிரியா்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.