சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்.2-இல் கிராமசபைக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், செம்பனாா்கோவில் வட்டாரத்தை தவிா்த்த பிற கிராம ஊராட்சிகளில் அக்டோபா் 2-இல் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், செம்பனாா்கோவில் வட்டாரத்தை தவிா்த்த பிற கிராம ஊராட்சிகளில் அக்டோபா் 2-இல் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் காந்தி ஜயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டம் ஊரக உள்ளாட்சி தோ்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள குத்தாலம், செம்பனாா்கோவில் வட்டார கிராம ஊராட்சிகளை தவிா்த்து, பிற கிராம ஊராட்சிகளில் அக்.2-ஆம் தேதி கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அதில் ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.