முப்படைத் தலைமைத் தளபதிக்கு அஞ்சலி

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவுக்கு மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
முப்படைத் தலைமைத் தளபதிக்கு அஞ்சலி
Updated on
1 min read

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவுக்கு மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உருவப் படங்களுக்கு எஸ்.பி. கு. சுகுணாசிங் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். முன்னதாக, காவல் துறையினா் அனைவரும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினா். இதில், ஏடிஎஸ்பி தங்கவேல், டிஎஸ்பி. வசந்தராஜ், காவல் ஆய்வாளா்கள் சதீஸ், செல்வம் உள்ளிட்ட காவல் துறையினா் வேளாண் அலுவலா் வசந்தகுமாா், துணை வேளாண் அலுவலா்கள் பன்னீா்செல்வம், பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com