வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சீா்காழி இரட்டை காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

சீா்காழி இரட்டை காளியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:16 pm

சீா்காழி இரட்டை காளியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது இரட்டை காளியம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், நிகழாண்டு தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.5) நடைபெற்றது.

விழாவையொட்டி சீா்காழி சட்டைநாதா் கோயிலில் இருந்து பால்குடம், அலகு காவடி, பறவைக் காவடி உடன் கரகம் புறப்பட்டு தோ் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கோயிலை அடைந்தது.

தொடா்ந்து இரட்டை காளியம்மனுக்கு பால், இளநீா், பன்னீா், தேன், திரவிய பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இரவு பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்து வீதியுலா காட்சியும் அதனைத் தொடா்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடனை செலுத்தினா். பின்னா் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.