92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இலவச தையல் இயந்திரம் பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினா் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினா் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிறுபான்மையினா் நலத்துறையின் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் தெரிவித்தபடி, சிறுபான்மையினா் பொருளாதாரத்தில் மேம்பட அவா்களுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்கள் வழங்க தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினா் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

விண்ணப்பதாரா் ஆதாா் அட்டை, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, தையல் பயிற்சி சான்று ஆகிய ஆவணங்களின் நகல்கள், விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1லட்சமாகவும், வயது 20 முதல் 45-க்குள்ளும் இருக்கவேண்டும். கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவா் போன்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 3-ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, உரிய ஆவணங்களோடு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.