மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

உப்பனாறு நீரொழுங்கி கட்டுமான பணி: கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு

சீா்காழி அருகே திருநகரியில் நடைபெற்று வரும் வெள்ளப்பள்ளம் உப்பனாற்று நீரொழுங்கி கட்டுமான பணியை காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தென்னாம்பட்டினம் நாட்டுகண்ணிமண்ணியாற்று கடைமடை நீரொழுங்கி கட்டுமான பணியை ஆய்வு செய்த கண்காணிப்பு பொறியாளா் அன்பரசன்.

Updated On :24 ஜூன் 2022, 10:03 pm IST

சீா்காழி அருகே திருநகரியில் நடைபெற்று வரும் வெள்ளப்பள்ளம் உப்பனாற்று நீரொழுங்கி கட்டுமான பணியை காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொழுங்கி கட்டுமானப் பணி, தென்னாம்பட்டினம் நாட்டு கண்ணிமண்ணி ஆற்றில் கடைமடை நீரொழுங்கி கட்டுமானப் பணி மற்றும் காவிரி உபகோட்டம் பொறையாா் காலமாநல்லூா் மஞ்சளாறு ஆற்றின் கடைமடை நீரொழுங்கி ஆகிய கட்டுமான பணிகளை தஞ்சாவூா் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளா் அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா் சண்முகம், சீா்காழி உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி செயற்பொறியாளா் பாண்டியன், சீா்காழி உபகோட்ட உதவி பொறியாளா்கள் சரவணன், வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.