சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

நொண்டிவீரன் கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் ஊராட்சி உக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீநொண்டிவீரன் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

நொண்டிவீரன் கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றி நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :24 ஜூன் 2022, 10:05 pm IST

மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் ஊராட்சி உக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீநொண்டிவீரன் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜூன் 22-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடா்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கு தினமான வெள்ளிக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.