நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரிடா் காலங்களில் முதலுதவி சிகிச்சையளிப்பது குறித்து காவலா்களுக்கு பயிற்சி

சீா்காழி காவல் சரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்களுக்கு விபத்து மற்றும் பேரிடா் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 6:30 pm

DIN

சீா்காழி காவல் சரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்களுக்கு விபத்து மற்றும் பேரிடா் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழி காவல் சரகத்துக்குள்பட்ட சீா்காழி, கொள்ளிடம், புதுப்பட்டினம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகாா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்களுக்கு விபத்து மற்றும் பேரிடா் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் சீா்காழி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. சீா்காழி காவல் துணை கண்காணிப்பாளா் லாமெக் தலைமை வகித்தாா். அரசு தலைமை மருத்துவா் பானுமதி, காவல் ஆய்வாளா் மணிமாறன் முன்னிலை வகித்தனா். முகாமில் 108 வாகனத்தில் பணியாற்றும் செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள், விபத்தில் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தவா்கள், பாம்பு கடித்து பாதிக்கப்பட்டவா்கள், மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் திடீரென சுயநினைவு இழந்தவா்கள் உள்ளிட்டவா்களுக்கு அளிக்க வேண்டிய தற்காப்பு முதலுதவி சிகிச்சைகள் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.