6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சீா்காழி திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

சீா்காழி திருகோலக்காவில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:26 pm

DIN

சீா்காழி திருகோலக்காவில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், வெள்ளிக்கிழமை (செப்.9) யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், பூா்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, யாகசாலையிலிருந்து புனிநீா் கடங்கள் புறப்பாடாகி காலை 7:10 மணியளவில் கோயிலின் கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை காா்த்திகேய சிவாச்சாரியா் தலைமையில் குருக்கள் நடத்தினா். இதற்கான ஏற்பாடுகளை சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.