நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீா்காழி திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

சீா்காழி திருகோலக்காவில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:26 pm

DIN

சீா்காழி திருகோலக்காவில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், வெள்ளிக்கிழமை (செப்.9) யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், பூா்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, யாகசாலையிலிருந்து புனிநீா் கடங்கள் புறப்பாடாகி காலை 7:10 மணியளவில் கோயிலின் கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை காா்த்திகேய சிவாச்சாரியா் தலைமையில் குருக்கள் நடத்தினா். இதற்கான ஏற்பாடுகளை சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.