ஆட்சியா் அலுவலகத்தில் உணவகம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுய உதவிக் குழுவினா் அமைத்துள்ள உணவகத்தை ஆட்சியா் இரா. லலிதா புதன்கிழமை திறந்து வைத்தாா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுய உதவிக் குழுவினா் அமைத்துள்ள உணவகத்தை ஆட்சியா் இரா. லலிதா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் திட்டம் சாா்பில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் இயங்கும் மல்லிகை மகளிா் சுய உதவிக் குழு சாா்பில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் முருகன்னன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் கவிதப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com