தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமையேற்று, முதியோா்களுக்கு எதிரான உறுதிமொழியை வாசித்தாா். கல்லூரி துணை முதல்வா் எஸ். மகாலிங்கம், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். நடராஜன், முழுநேரக் கல்லூரி உதவியாளா் ஆா். சிவராமன், சுயநிதிப் பிரிவு உதவியாளா் ப. செல்வமுத்துக்குமாரசாமி மற்றும் மாணவா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.