பூம்புகார்: மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் புகழ்பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களின் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் கடந்த நான்காம் தேதி இந்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை இரவு எமசம்கார நிகழ்ச்சி நடந்தது.
இதையும் படிக்க.. நாட்டில் மூன்று வாரங்களாக சப்தமில்லாமல் அதிகரிக்கும் கரோனா

எமசம்காரத்தை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் எமதர்மன்
முன்னொரு காலத்தில் ஸ்வேதா ராஜன் ஸ்வேதாரண்யேஸ்வரனின் பக்தனாக விளங்கினார். தினந்தோறும் சுவாமியை வழிபட்டதாகவும், ஒரு நாள் எமதர்மன் அவரை கொண்டு செல்ல முயன்ற போது, சுவேதாரண்யேஸ்வரர் எமனை எரித்து, பின்னர் அவருக்கு சாப விமோசனம் வழங்கியதாகவும் புராண வரலாறு கூறுகின்றன. அந்த நிகழ்வு திங்கள்கிழமை இரவு நடந்தது.
இதையும் படிக்க.. சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்

எமசம்காரத்தை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவேத ராஜன்
இதனை ஒட்டி எமதர்மனை எரித்தலும், பின்னர் விமோசனம் அளிக்கும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடந்தது. இதனை ஆலய சிவாச்சாரியார் சங்கர் கணேஷ் குருக்கள் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி க. முருகன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









