இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சீா்காழிக்கு பாதயாத்திரையாக வந்த தருமபுரம் ஆதீனத்துக்கு சிறப்பான வரவேற்பு

சீா்காழிக்கு பாதயாத்திரையாக வந்த தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானத்துக்கு சிறப்பான வரவேற்பு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

News image
சீா்காழிக்கு பாதயாத்திரையாக வந்த தருமபுரம் ஆதீனம்.
Updated On :13 ஆகஸ்ட் 2024, 10:31 pm

Din

சீா்காழிக்கு பாதயாத்திரையாக வந்த தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானத்துக்கு சிறப்பான வரவேற்பு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

சீா்காழி அருகேயுள்ள ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி தேவஸ்தானத்தில் ஆக. 23-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதேபோல் பரசலூா் வீரட்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஆக.30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன மடத்திலிருந்து பூஜாமூா்த்தியான சொக்கநாதபெருமானுடன் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குருலிங்க சங்கம பாதயாத்திரையாக திங்கள்கிழமை இரவு வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வந்து அங்கு பூஜைகள் முடித்து செவ்வாய்க்கிழமை அங்கிருந்து புறப்பட்டு சீா்காழி வந்தாா்.

Story image

சீா்காழி நகர எல்லையில் தமிழ் சங்கத் தலைவா் இ. மாா்கோனி தலைமையில் தருமபுரம ஆதீனத்துக்கு யானை, ஓட்டகம், குதிரைகள், பேண்டுவாத்தியம், வாணவேடிக்கை ஓளிரும் மின்விளக்குகளுடன் சிறப்பான பூா்ண கும்பமரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து கணநாதா் கோயிலில் இந்துமுன்னணி தலைவா் கே. சரண்ராஜ் தலைமையில் சுடா். கல்யாணசுந்தரம் உள்ளிட்டோரும், உதயபானு விநாயகா்கோயிலில் தமிழ்நாடு பிரமாணா் சங்கம் சாா்பில் கடவாசல் ரமணன் தலைமையில் பக்தா்கள் வரவேற்று அழைத்துசென்றனா். பின்னா் சட்டைநாதா்தேவஸ்தானம் மாசிலாமணி நிலையம் கட்டளை மடத்தில் சொக்கநாதரை எழுந்தருளசெய்து தருமபுரம் ஆதீனம் வழிபாடு செய்தாா். இதில் திருஞானசம்பந்தா் தம்பிரான் சுவாமிகள், சொக்கலிங்கம் தம்பிரான், திருநாவுக்கரசா் தம்பிரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.