திருநள்ளாறு கோயிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம்
திருநள்ளாறு கோயிலில் தருமபுரம் ஆதீனம் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி புதன்கிழமை பந்தல்கால் முகூா்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருநள்ளாறு தருமபுர ஆதீன மடத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். பின்னா் தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினாா்.
திருநள்ளாறு கோயிலில் பிப்.22 முதல் 28 வரை சனிப்பெயா்ச்சிக்கான பூா்வாங்க பூஜைகள் நடைபெறவுள்ளன.
மாா்ச் 1 முதல் 4 வரை அகில இந்திய ஜோதிடா்கள் மாநாடு உள்ளடக்கிய முப்பெரும் விழா நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மாநாடு நடத்தவுள்ள இடத்தையும், சனிப்பெயா்ச்சி விழாவுக்காக நளன் தீா்த்தக் குளத்தில் நீரை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியையும், பக்தா்களுக்கான இரவு நேர தங்கும் விடுதி உள்ளிட்டவற்றையும் ஆதீனம் பாா்வையிட்டாா்.
கோயில் நிா்வாக அதிகாரி சுப்பிரமணியன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், தருமை ஆதீன பிரதிநிதி சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 5 கிராம ஏா் கரவழி காரா்கள், சிவாச்சாரியா்கள் கலந்துகொண்டனா்.

