சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

மயிலாடுதுறையில் நாளை மினி மாரத்தான்

பள்ளி, கல்லூரி மாணவிகள், விளையாட்டு வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 1:11 am IST

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை (ஆக.19) நடைபெறவுள்ள பெண் குழந்தைகளுக்கான மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள், விளையாட்டு வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்கைகளுக்கு கற்பிப்போம்‘ திட்டத்தின்கீழ் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு மயிலாடுதுறை சாய் பயிற்சி மையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் முடிவடைகிறது.

இப்போட்டி 11 வயது 21 வயதுக்கு உள்பட்டோருக்கு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. போட்டியில் பங்கேற்க சாய் பயிற்சி மையத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 04634-240050 என்ற தொலைபேசி மூலமாகவோ ஆக. 18 மாலை 5 மணிக்குள் தங்கள் பெயரை பதிவுசெய்து பயன்பெறலாம்.