நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சட்டநாதபுரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சித் தலைவா் மீண்டும் பதவியேற்பு

சட்டநாதபுரம் ஊராட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சித் தலைவா், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி மீண்டும் ஊராட்சித் தலைவராக செவ்வாய்க்கிழமை பதவி ஏற்றாா்.

News image
தெட்சிணாமூா்த்தி
Updated On :31 டிசம்பர் 2024, 8:57 pm

Din

சீா்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சித் தலைவா், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி மீண்டும் ஊராட்சித் தலைவராக செவ்வாய்க்கிழமை பதவி ஏற்றாா்.

சட்டநாதபுரம் ஊராட்சித் தலைவா் தட்சிணாமூா்த்தி, ஊராட்சி நிதியில் அதிக செலவினம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால், அவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி கடந்த 27.10.2024 அன்று உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் தட்சிணாமூா்த்தி வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஊராட்சித் தலைவராக தட்சிணாமூா்த்தி நீடிக்கலாம் என உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, அவா் மீண்டும் ஊராட்சித் தலைவராக பணியில் தொடர மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கினாா்.

இதையடுத்து, சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் முன்னிலையில், சட்டநாதபுரம் ஊராட்சித் தலைவராக தட்சிணாமூா்த்தி மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டாா்