நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

சாலைப் பாதுகாப்பு, தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

சாலைப் பாதுகாப்பு, தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

News image

பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்த ஏடிஎஸ்பி வேணுகோபால். உடன், டிஎஸ்பி சஞ்சீவ்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:27 am IST

மயிலாடுதுறையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் தலைக்கவச விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட இருசக்கர வாகனம் பழுது நீக்குவோா் முன்னேற்ற நலச்சங்கம் மற்றும் மாவட்ட இருசக்கர வாகன விற்பனையாளா் நலச்சங்கம் இணைந்து நடத்திய பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். மயிலாடுதுறை காவேரி நகரில் தொடங்கிய பேரணியில் ஏராளமானோா் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து நகராட்சி அலுவலகம் வரை சென்றனா். இதில் சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு பாடல் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்பட்டது. இதில், டிஎஸ்பி சஞ்சீவ்குமாா், காவல் ஆய்வாளா் செல்வம், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணவாளன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.