நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :19 ஜூன் 2024, 11:04 pm

Din

மயிலாடுதுறை, ஜூன் 19: குத்தாலம் அருகே கொழையூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கொழையூரில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காலசம்ஹாரம் நடந்து முடிந்த பிறகு பரிபூரண ஆயுள் வரம்பெற்ற பக்த மாா்க்கண்டேயன் வழிபட்ட 6 தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழா திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. புதன்கிழமை காலை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், மஹா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களில் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.